வெள்ளி, 20 டிசம்பர், 2013

விநாயகர் துணை

 

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரையின் ஓரத்திலே அரசமரத்தின் நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
மண்ணினாலே செய்திடினும் மஞ்சளினாலே செய்திடினும் ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் காட்டும் பிள்ளையார்
அவல்பொரி கடலையும் அரிசிகொழுக் கட்டையும் கவலையின்றி தின்னுவார் கண்ணைமூடித் தூங்குவார்
கலியுகத்தின் விந்தையை காணவேண்டி அனுதினமும் எலியின்மீது ஏறியே இஷ்டம்போல சுற்றுவார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்   





விநாயகனே வினை தீர்ப்பவனே    


விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம் குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம்
விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே
உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் கணநாதனே மாங்கனியை உண்டாய் கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக