2. வையத்து வாழ்வீர்காள்!
வையத்து
வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும்
கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம்
பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு
எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன
செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும்
பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா
றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக