ஆயிரம் பாட்டெழுதி ... அத்தனைக்கும்
பொருள் எழுதி
பாயிரமும் எழுதி வந்தேன்
முருகா உன்னை ... பார்த்துவிட்டேன் பாட்டெதற்கு?
(ஆயிரம் பாட்டெழுதி ... அத்தனைக்கும் பொருள் எழுதி
பாயிரமும் எழுதி வந்தேன்)
கோடிப் பணந்திரட்டி ... கொட்டிவைக்க வீடுகட்டி (2)
பாடுபட்டு குலைந்தேன் நான்
முருகா உன்னை ... பார்த்துவிட்டேன் வீடெதற்கு?
(ஆயிரம் ... )
ஆவி நிலைக்குமென்று ... ஆடுகின்ற கோடியில் (2)
ஓர் பாவியென துடித்தேன்
முருகா உன்னை ... பார்த்துவிட்டேன் துயரெதற்கு?
(ஆயிரம் ... )
வேதம் நான்கறிந்தேன் ... விளக்கங்கள் கேட்டறிந்தேன் (2)
பாதைகளின் முடிவே ஓம்
முருகா உன்னை ... பார்த்துவிட்டேன் நூலெதற்கு?
ஆயிரம் பாட்டெழுதி ... அத்தனைக்கும் பொருள் எழுதி
பாயிரமும் எழுதி வந்தேன்
முருகா உன்னை ... பார்த்துவிட்டேன் பாட்டெதற்கு...
பாயிரமும் எழுதி வந்தேன்
முருகா உன்னை ... பார்த்துவிட்டேன் பாட்டெதற்கு?
(ஆயிரம் பாட்டெழுதி ... அத்தனைக்கும் பொருள் எழுதி
பாயிரமும் எழுதி வந்தேன்)
கோடிப் பணந்திரட்டி ... கொட்டிவைக்க வீடுகட்டி (2)
பாடுபட்டு குலைந்தேன் நான்
முருகா உன்னை ... பார்த்துவிட்டேன் வீடெதற்கு?
(ஆயிரம் ... )
ஆவி நிலைக்குமென்று ... ஆடுகின்ற கோடியில் (2)
ஓர் பாவியென துடித்தேன்
முருகா உன்னை ... பார்த்துவிட்டேன் துயரெதற்கு?
(ஆயிரம் ... )
வேதம் நான்கறிந்தேன் ... விளக்கங்கள் கேட்டறிந்தேன் (2)
பாதைகளின் முடிவே ஓம்
முருகா உன்னை ... பார்த்துவிட்டேன் நூலெதற்கு?
ஆயிரம் பாட்டெழுதி ... அத்தனைக்கும் பொருள் எழுதி
பாயிரமும் எழுதி வந்தேன்
முருகா உன்னை ... பார்த்துவிட்டேன் பாட்டெதற்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக